Tuesday, 13 August 2024





சீண்டப்படாத கலையின் புலம்பல்


ஒராயிரமாண்டின் நிதர்சன சாட்சி

கலவையான மரபுத் தொடர்ச்சியின்

எச்சங்களின் ஆணவக் கூச்சல்கள்

அதனெதிரே நிற்கக்  அருகதையற்றவர்கள்

தற்பெருமைக்கும் கலையின் பரிணாமங்களின் தன்னெழுச்சியில் வெளியுமிழ்ந்த

தரிசனங்களில் ஒன்று

பொருளியல் தேவையின் அழுத்தத்தில்

உணர்வின்றி தன்னிச்சையாய் 

வாகன ஒட்டத்தில் கன்னத்தில் ஒற்றிக் கொள்ளும் பங்களிப்பில்லா சமுதாயத்தின் பிரதிநிதி

வார இறுதி நாட்களில் கட்டுப்படுத்தவியலா அதீத மக்கள் வரத்தினால் சீண்டப்படாத 

கலை நுணுக்கங்கள்  சலிப்புற 

தற்படங்களின் ஒவ்வாரு கணத்திற்கும்

பெருமூச்சு விட்டபடி கம்பீரமாக நிற்கும்

பெருமைக்கும் சிறுமைக்கும் பதிலளிக்காமல் காலத்தின் கோலத்திற்கு முன்னுதாரனமாய்

தன்னடக்கத்துடன் அமர்ந்திருக்கும்

பெரிய கோயில்



கலித்தேவன்.


No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...