ஒளி ஊடுருவல்
அகத்தில் பாய்ந்த ஒளி உடலை
ஊடுருவி முழுவதும் ஒளிர்ந்தது
கூடுதலாக என்னப்பா மகிழ்ச்சியாயிருக்க
ஒன்றுமில்லை
அகத்தின் அழகு என்றேன்
பீறீட்டு வெளியாகும் போதாமையை புன்னகையின் ஒளியால் பரவச் செய்தாய்
முழுமையடைய மறுப்பே துணை
தேடிக் கொண்டிருப்பதை விட அறிவில் அறிவதே ஆனந்தம்
துயரில் நுனி நாக்கே பெரும் எதிர்
வளைய வரும் கோள்களா காட்டும்
வழியெய்யறிவதே நோக்கு
ஈர்ப்பின் ரகசியம் ஈர்க்கப்படுவதே
ஒளிப்புள்ளி ஈர்க்கப்பட்டு
ஜோதியாவது
மூழ்குவதும் இரண்டற கலப்பதும்
தூய ஈர்ப்பின் இருப்பு
தனிமைத் தேனை பருகுவதின்பம்
விருப்பு வெறுப்பு இயல்பாகும்
எதையும் ஏற்றுக் கொள்ளலில்
தெளிவு
அகமும் புறமும் ஒன்றான பின்னே
வெளி ஒன்றுண்டோ?
கலித்தேவன்
No comments:
Post a Comment