பதம்
பதம் பார்த்து பார்த்து
கூர்தீட்டப்பட்ட வாளை அதன்
உறையை விட்டு எடுக்க
வேண்டாம்
முதலில் எடுக்கப்பட்ட வாளின்
வாரிசுகள் போட்டி போட்டுக்
கொண்டு விதவிதமாய்
வளர்ந்து , வளர்த்துக்கொண்டு
இருக்கிறார்கள்
உங்களை எடுக்க சொல்லி
கட்டாயப்படுத்தும் கவர்ச்சியான உறை
ஆழ்மனதில் படிந்து தூங்க
விடாமல் செய்யும் உறை
வடிவங்கள் மாறினாலும்
இறுதி ஒன்றுதான்
நட்பினிடையே தோண்டப்பட்ட
பள்ளம்
மூடுகையில் தெரியும்.
கலித்தேவன்
No comments:
Post a Comment