பயன்
எண்ணக் காடுகளின் குவிப்பை வன்ம நெருப்பாலிட்டு உருக்கி
வார்த்து வெறுப்பின் நஞ்சை
தடவி ஏய்ததால்
குறி நோக்கி பாயும் தோறும்
விரிசல்,
செயலிழப்பு
அடர்ந்த இருளுக்குள் இருளாய் மிதித்து விரிசலனூடே அமிழ்தப்படும் உண்மையின்
பல ரூபங்கள் வரும்
காலங்களில் தன்னிச்சயாக வெளியேறும் சமயங்களில்
மண்டியிட்டு கதறி என்ன பயன்
கலித்தேவன்.
No comments:
Post a Comment