Saturday, 6 July 2024

பயன்

 

பயன்



எண்ணக் காடுகளின் குவிப்பை வன்ம நெருப்பாலிட்டு உருக்கி

வார்த்து வெறுப்பின் நஞ்சை

தடவி ஏய்ததால்

குறி நோக்கி பாயும் தோறும் 

விரிசல், 

செயலிழப்பு

அடர்ந்த இருளுக்குள் இருளாய் மிதித்து விரிசலனூடே அமிழ்தப்படும் உண்மையின்

பல ரூபங்கள் வரும்

காலங்களில் தன்னிச்சயாக வெளியேறும் சமயங்களில்

மண்டியிட்டு கதறி என்ன பயன்


கலித்தேவன்.

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...