இரண்டாவது
முதல் புத்தகம் படிக்க துவங்கி
முக்கால்பாகம் படித்துக் கொண்டிருந்த வேளையில்சற்றே பக்கங்களை புரட்ட மறுத்ததால்
இரண்டாவது புத்தகத்தை யாரோ படித்துவிட்டு பாதியில்
வைத்த இடத்திலிருந்து படிக்க
நேர்ந்தது
கூடவோ குறையவோ நிகழ்வுகள் , சுவாரஸ்யம்
திருப்தியுடன் படித்தாலும்
முன்கதையை அறிய
படித்தவனை அனுகுவதா
புத்தகத்தை கேட்பதா
புத்தகத்தை எழுதியவனை
கேட்கலாமென்றால்
மறுபதிப்பு வரும் வரை
பொறு என்றான்
புத்தகம் சொன்னது முடிந்தவரை படி
கலித்தேவன்
No comments:
Post a Comment