Friday, 21 June 2024

 தவளையின் கானம்.



புதிதாக உருவாக்கப்பட்ட நகர்

நடுவிலே புதியதாக கட்டிக்கொண்டிருக்கும் வீடு

சுற்றிலும் எல்லைகற்கள் பதிக்கப்பட்ட

வீட்டு மனைகள்

தவளைகள் கூச்சல் அல்லது ஒலி 

எழுப்பினால் மழை வரும் 

குடையோடு நடந்தேன் பாதையில் வாகனங்கள் வந்து போகாத நடுவிலே 

தாவியபடி ஒரு தவளை பாட ஆரம்பித்தது

கூட்டு பாடலாய் எதிரொலித்தது

கந்தர்வ கானம் இசையமைப்பாளர் இன்றி

நின்று பார்த்தேன் ரகசிய குரலில்

மழையில் நனைவதற்கு குடை எதற்கு

என்றது 

எங்களின் குடியிருப்பை அழிக்க வந்தாலும் நீங்கள் என் விருந்தாளி

மழையில் நனைந்து உற்சாக நடனமாடலாம் வாருங்கள் 

மீண்டும் கூட்டு பாடலாய் இசை

உச்சத்திற்கு சென்றது

மழை வந்தே விட்டது.


கலித்தேவன்.

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...