நாள் முழுவதும் வானம் இருண்டிருந்தது
மழை பெய்யுமா? பெய்யாதா?
கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான ஒளி இடியும்
வெற்று காற்றாய் புழுக்கமும் வியேர்வையும்
விளையாட்டாய் தலைகாட்டும் சூரியன்
நசநசத்த முழுக்க உடலையும் நனைத்த
கனன்ற பூமியிலிருந்து கிளம்பும் அனல்
முழுத் தொகை கொடுத்து வாங்க
இயலாவிட்டாலும் மாதத்தவனையில் அறை குளிர்விப்பான்
மின்சார வாரியத்தை வாரித் தூற்றியபடி
கைவிசிறியால் விசிறிக் கொண்டிருந்தோம்.
காலத்தினால் விலக்களிக்க இயலாத
உருக்கும் வெப்பத்தினால் வெட்டப்பட
மரங்களின் கதறலையும் சேர்த்து
கதறிக் கொண்டிருந்தோம்
கலித்தேவன்.
No comments:
Post a Comment