உறவுகள்.
புறந்தள்ளி புறந்தள்ளி புறந்தள்ளி
பாதையை உருவாக்கி
அகத்தினிலே ஒவ்வாமையை வளர்த்து
வளர்த்து , இறுக்கத்தினிலே வாழ்ந்து
இறுக்கத்தினிலே மூழ்கி
முகந்திருப்பி நிற்பதிலே இன்பம்
உறவு வருவதற்கும் போவதற்குமானது
மலை போல குவித்த செல்வம்
நுண்ணுர்வுகளால் நுண்ணிய அனுக்கம்
ஒரே வீச்சில் வெட்டுப்பட்ட கிளைகள்
வேர்களால் நிற்கும் மரம்
ஆயிரமாயிரம் இலைகளால் வளர்ந்தது
நீரின்றி பட்டுப் போனால் சரி
அமிலத்தாலென்றால் ?
கலித்தேவன்
No comments:
Post a Comment