காலம் காலமாக கடமைகளை
பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்
நடப்பவைகளையும் நடந்து முடிந்தவைகளையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்
கை பிடித்து அழைத்துச் செல்லும்
காலத்தை அதன் சுவடை தேடிக் கொண்டிருக்கிறோம்
நம்மீது அழுத்தும் அழுத்தங்களை
சுமைகளாக , விருப்பங்களாக, ஏற்றுக் கொள்கிறோம்
கடவுள் துகள்களாக கிடைக்கிறார்
மித்திர பேதம் பலிக்கிறது
ஊசி முனையின் காதினிலே யானைய நுழைத்து காட்டினான்
புதிய உலகம் பிறந்தது. உற்சவ மூர்த்தி
வேரோடு பிடுங்கப்பட்டு உடைந்து நடைபாதையானது.
காலம் காலமாக கடமைகளை பற்றி மட்டும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.
கலித்தேவன்
No comments:
Post a Comment