Friday, 21 June 2024

 காலம் காலமாக கடமைகளை

பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

நடப்பவைகளையும் நடந்து முடிந்தவைகளையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்

கை பிடித்து அழைத்துச் செல்லும்

காலத்தை அதன் சுவடை தேடிக் கொண்டிருக்கிறோம்

நம்மீது அழுத்தும் அழுத்தங்களை

சுமைகளாக , விருப்பங்களாக, ஏற்றுக் கொள்கிறோம்

கடவுள் துகள்களாக கிடைக்கிறார்

மித்திர பேதம் பலிக்கிறது

ஊசி முனையின் காதினிலே யானைய நுழைத்து காட்டினான்

புதிய உலகம் பிறந்தது. உற்சவ மூர்த்தி

வேரோடு பிடுங்கப்பட்டு உடைந்து நடைபாதையானது.

காலம் காலமாக கடமைகளை பற்றி மட்டும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.




கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...