அரவணைப்பு
சிலின்டரின் குழிழை திருகி
அடுப்பின் காதையும் திருகி ஒரு
நொடியில் பற்ற வைத்தார்கள்
மனைவியும் மகளும்
மண்ணென்னை காற்று அழுத்தும்
அடுப்பிலும் திரியிலும் சற்றே போராடி பற்றவைத்தார்கள் அம்மா அடுப்பை
அம்மாயியும், அப்பாயியும் விறகடுப்பில் புகையும் புகையில்
கண்ணெரிச்சலில் பேராடி போராடி
பற்ற வைத்தார்கள்
நெருப்பு ஒன்றுதான் பொது
அன்பும் ,பாசமும் ,பொறுப்பும்
காலங்கள் கடந்தாலும் நினைவுகளில் நீங்காமல் இருப்பது
எரிச்சலிலும் மாறா அரவணைப்பு
கலித்தேவன்.

No comments:
Post a Comment