Wednesday, 4 September 2024

 








மிருதங்கம்.


மிக நீண்ட காலமாக பழக்கத்தில்

புழுக்கத்திலிருந்தது போல

வழவழப்பு

வார் பிடித்து வார்பிடித்து இறுகி

தயாராக இருந்து

சாதகத்தில் தன்னை மறந்த நிலையில் அனுதினமும் வெளிபடும்

உற்சாகம்

தொடையில் குழந்தையை தட்டி தூங்க வைப்பது போல

குழந்தையின் மெல்லிய மூச்சு

அறை எங்கும் வியாபித்தது 

தன் நிலை மறக்க

சுருதி மீட்ட இசைக்கோவை தட்டலில்

தெறித்து  சிதறியது

தட்ட தட்ட மயக்கத்திலாழ்தோர்

தலையை மட்டும் ஆட்டினர்

நான் மட்டுமே இருந்தேன் என்னோடு



கலித்தேவன்





அரவணைப்பு


சிலின்டரின் குழிழை திருகி

அடுப்பின் காதையும் திருகி ஒரு

நொடியில் பற்ற வைத்தார்கள்

மனைவியும் மகளும்

மண்ணென்னை காற்று அழுத்தும் 

அடுப்பிலும் திரியிலும் சற்றே போராடி பற்றவைத்தார்கள் அம்மா அடுப்பை

அம்மாயியும், அப்பாயியும் விறகடுப்பில் புகையும் புகையில்

கண்ணெரிச்சலில் பேராடி போராடி 

பற்ற வைத்தார்கள்

நெருப்பு ஒன்றுதான் பொது

அன்பும் ,பாசமும்  ,பொறுப்பும்

காலங்கள் கடந்தாலும் நினைவுகளில் நீங்காமல் இருப்பது

எரிச்சலிலும்  மாறா அரவணைப்பு


கலித்தேவன்.


 







இளமையின் தூது.



இளமைக்கே உரிய துள்ளில்

உற்சாகத்தில் 

மருண்டு அலைபாயும் கண்களில்

அலட்சிய பாவத்தில்

இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொள்ளும் நடையில்

கிள்ளு கீரையாய் உதாசீனப் படுத்தும் பாட்டில் பிய்த்துக் கொள்ள 

சரம்மாறி தோன்றும் வியப்பு

பேருந்தோ , கடையோ விட்டிறங்கியவுடன் இணைக்கும்

காதுக்கு வேலை முடிவது வீடா? கடையா?

வீதிகளில், ஜோடி சேருமிடங்களில்

கண்ணீருடன் 

புன்னகையில் தன்னை மறந்து

விரிகையில் நம்பிக்கை 

அதிவிரைவில் இணைந்து  வேகத்தில் கசந்து பிரியும் விடை தருவது காதலா?

உடலுக்கு மட்டும என்றால் மனதுக்கு வாழ்க்கைக்கு எப்போது


கலித்தேவன்.

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...