Monday, 22 July 2024

மேதாவித்தனம்.

 

மேதாவித்தனம்



படைப்பின் தருனத்தை வெளிப்படுத்தும்

சொற்களின் பிணைப்பு

உற்சாகமான , லயமான இனிமையான 

குறிப்பாலுணர்த்தும்

எழும் புலவன், புதுக்கவிதையின்

மரபிலாழ்ந்தவனை நீர் தூக்கிச்

சுமக்க வேண்டாம், உங்களின்

தேவைகளோ , வேண்டுதல்களோ 

எமக்குத் தேவையில்லை

கவிதைக்கான தருணத்தை  படைப்பதே

எமக்கிடப்பட்ட ஆனை

எடுக்கவோ கோர்க்கவோ முடியவில்லை எனில் வளர விடுங்கள்

அதீத மேதாவித் தனத்தால் முற்றுகையிடாதீர்

பின்தொடரும் நிழலின் குரல் கேட்கிறதா?



கலித்தேவன்

1 comment:

  1. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...