Saturday, 6 July 2024

தீவிரமில்லாமல்

 தீவிரமில்லாமல் 

எழுத வேண்டுமென்று
கவிதைகள் எழுதியதில்
தீவிரம் தீவிரமாகியது
சொற்குற்றம் பெருட்குற்றம்
பொருட்படுத்தபடவில்லை
என் கவிதைகளே பேசின
தூங்க விடாமல் தட்டி
எழுப்பின
முரண்பாட்டை நீக்கின
இயற்கையை அலங்கரித்தன
சூழ்நிலையை அறிய வைத்தன
அழகை ஆராதித்தன
அறிவை துலக்கின
பெண்மையை ரசித்தன
உண்மையை புசித்தன
புதிய உலகின் வாசலை திறந்தன
தீவிரமில்லாமல் கவிதைகள்
எழுத வேண்டுமென்று.......


கலித்தேவன்.

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...