தீவிரமில்லாமல்
எழுத வேண்டுமென்றுகவிதைகள் எழுதியதில்
தீவிரம் தீவிரமாகியது
சொற்குற்றம் பெருட்குற்றம்
பொருட்படுத்தபடவில்லை
என் கவிதைகளே பேசின
தூங்க விடாமல் தட்டி
எழுப்பின
முரண்பாட்டை நீக்கின
இயற்கையை அலங்கரித்தன
சூழ்நிலையை அறிய வைத்தன
அழகை ஆராதித்தன
அறிவை துலக்கின
பெண்மையை ரசித்தன
உண்மையை புசித்தன
புதிய உலகின் வாசலை திறந்தன
தீவிரமில்லாமல் கவிதைகள்
எழுத வேண்டுமென்று.......
கலித்தேவன்.
No comments:
Post a Comment