Saturday, 6 July 2024

 



தகுதியானவற்றுக்கும்

தகுதியுள்ளவைகளுக்கும்
என்ன வேறுபாடு
அறிவின் நேர்மறைக்கும்
எதிர்மறைக்கும் இடையே
தோன்றும் அலசல்களா
பூர்ணம் அடையும் பூர்ணமா
எதிர்நோக்குதலின் வழியே
உண்மையை அளவிடுதலா
காத்திருப்பின் வலியறிந்த
சுயநலத்தின்  தாக்கங்களா
நிருபணமாகாத யதார்த்த
வாழ்வின் அங்கமா
கேள்விகளின் சக்திவாய்ந்த
அழுத்தங்களால்
தன்னறத்தின் சுய வெளிபாடே
தகுதி என கொள்ளலாமா?


கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...