காலைத் தேநீர்
விடியற்காலை காலை நான்கு மணிக்கே
எழுந்து கொள்ளும் பழக்கத்தினால்
எனக்குத் தேவையான தேநீரை
தயாரித்துக் கொள்ளும் திறமையை
வளர்த்துக் கொண்டேன்
பக்குவமான கொதிநிலையிலும்
தயாரித்து முடித்து ஆவி பறக்கும்
மணத்தை நுகர்வது உடலினுள்
செல்லும் காற்றை அடி வயிறு வரை
உணர முடியும்
ஒரு வித போதையுணர்வையும்
மன ஒருங்கிணைப்பும் கிட்டும்
எங்கிருந்தோ வரும் அபரிதமான சக்தியால் உச்ச நிலையில் கூர்மையான
செவி திறப்பும்
அவ்வப்போது தேநீர் கோப்பையிலிருந்து
ஒவ்வெரு வாயாக பருகும் தேநீர் ஜென்
நிலைக்கு தள்ளும்
வாசிப்பதற்காக திறந்து வைத்திருக்கும்
புதத்தங்களின் பக்கங்கள் மூளையில்
ஒவ்வாரு சொல்லாக பதிவதை உணரமுடியும்
தேநீரின் சுவை நாவின் சுவையுணர்வு
மொட்டுக்களின் வாயை திறக்கும்
தருணம் உடலின் மெய்யுணர்வின்
வாசலில் உற்சாகத்தை வாவாவென
கூக்குரலிட்டு அழைத்தபடி கூத்தாடும்
கண்மூடி ரசிக்கும் நிலையில் விரும்பும்
இசையின் லயம் ஓடும்,பறவைகளின்
இனிய விளித்தல்களின் உற்சாகம்
செவியில்
துளித்துளியாக கடைசித் துளி
பிரபஞ்சத்தின் எல்லையென உணரும் தருனம்
கலித்தேவன்
கலித்தேவன்

No comments:
Post a Comment