உலகத்துக்கு ஒவ்வாதவன்.
கூட்டத்தில் பேச அழைத்திருந்தனர்
உள்ளபடியே நுண்ணுர்வு மிக்கவன்
தன்னை முன்நிறுத்தும் , சுயதம்பட்டம் இல்லாதவன்
கடந்து வந்த பயண நோக்கமறிந்தவன்
தன் பட்டறிவை பொதுவாக்கியவன்
உழைப்பின் சுவை, திடம்,பயனறிந்தவன்
தனி ஒருவனின் ஏக்கம்
வார்த்தை ஜாலத்தைறியாதவன்
யதார்த்த வாதத்தை முன்வைத்து நடப்பவன்
கூட்டத்தில் தனித்திருப்பவன்
கூட்டம் கூடியது தனக்கல்ல நிதர்சனமறிந்தவன்.
எல்லாவற்றுக்கும் மேலாக
உண்மையானவன்.
கலித்தேவன்
No comments:
Post a Comment