Friday, 21 June 2024

வானவில்

 நேற்று மாலை பெய்த மழை

விடும் போது தோன்றிய வானவில்

வெகு ஆபூர்வமாக பார்த்தேன்

சாலையின் இருபுறமும் வளர்ந்த மரங்களுக்கிடையே அரைகோள வடிவில்

காட்சியாக கண்ணில் விரிந்தது

பாலத்தை நெருங்கும் போது பாலத்தின் 

மேல் ஒட்ட வைத்தது போல

திரும்பி கரையில் கோயிலின் விமானத்தை தழுவியது போல

தூரத்தில் பணை கூட்டத்தின் நடுவில்

ஒரு ஓவியத்தை போல

நகரின் எல்லையை நெருங்கும் போது

நுழைவாயிலை போல

குழந்தையின் பின்னனியில் தலையிலிருந்து வண்ண ஊற்றை போல

பொதுவாக தாயின் எளிமையான புன்னகையை போல

மழை நின்று வாகன பெருக்கத்தில்

சிக்கி தினறுவதை போல

மனம் ஆர்ப்பரிக்கும் தோறும் பிரகாசித்து

விரிவதை போல

நகரின் உயரமான இடத்திலிருந்து நகரின் முழுமைக்குமானதை போல

வெளிச்சம் கரைந்து இருமை கலக்கும்

அந்தியை போல கரைந்தது 


கலித்தேவன்.

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...