நேற்று மாலை பெய்த மழை
விடும் போது தோன்றிய வானவில்
வெகு ஆபூர்வமாக பார்த்தேன்
சாலையின் இருபுறமும் வளர்ந்த மரங்களுக்கிடையே அரைகோள வடிவில்
காட்சியாக கண்ணில் விரிந்தது
பாலத்தை நெருங்கும் போது பாலத்தின்
மேல் ஒட்ட வைத்தது போல
திரும்பி கரையில் கோயிலின் விமானத்தை தழுவியது போல
தூரத்தில் பணை கூட்டத்தின் நடுவில்
ஒரு ஓவியத்தை போல
நகரின் எல்லையை நெருங்கும் போது
நுழைவாயிலை போல
குழந்தையின் பின்னனியில் தலையிலிருந்து வண்ண ஊற்றை போல
பொதுவாக தாயின் எளிமையான புன்னகையை போல
மழை நின்று வாகன பெருக்கத்தில்
சிக்கி தினறுவதை போல
மனம் ஆர்ப்பரிக்கும் தோறும் பிரகாசித்து
விரிவதை போல
நகரின் உயரமான இடத்திலிருந்து நகரின் முழுமைக்குமானதை போல
வெளிச்சம் கரைந்து இருமை கலக்கும்
அந்தியை போல கரைந்தது
கலித்தேவன்.
No comments:
Post a Comment