Friday, 21 June 2024

மொழி

 

மொழி


மொழியின் வீச்சை உணர துடித்தான்  ஒரு நீண்ட

வாழ்க்கை தேவைப்பட்டது

சொற்களின் வழியே நிறுவ தலைப்பட்டான்  

வார்த்தைகள் சுனக்கம் காட்டின , இலக்கியத்துக்காக  

எதை  பின்

தொடர வேண்டும் 

சொற்கள் உள்ளே கோர்க்கப்பட்டு

ஒலியாக பரிணமித்தது 

ஓலியினை பின்தொடர முடியுமா?

பிரார்த்தனை ஒலியை பின்தொடர்ந்தவள் சந்தித்த

நிகழ்வுகள் என்ன?

கற்பனையின் உச்சத்தில் மொழியின் சிறப்பு இலக்கியத்தின்

பக்கங்களில் நிரம்பின

மொழிகளுக்குள் கண்டடைவதின்

கூறுகளுக்குள் சிக்காமல்

வெளியேறி வால்பிடித்து ஓடி

தப்பித்தன சொற்கள்

கேள்விகள், கேள்விகள், கேள்விகள்

பதில்களை தேடின

பிடி கொடுக்காமல்  நழுவி ஓடியது 

ஒலியை பின்தொடர்ந்தவளின்

மொளனம் பேசியது , பதில்களை தேடியது.


கலித்தேவன்.


2 comments:

  1. ஒளியை பின் தொடர்ந்தவள்
    அருமை

    ReplyDelete
  2. நல்ல கற்பனை, கவி வளத்துடன் கலியபெருமாளுக்கு வார்த்தைகள் வசப்படுகின்றன; வாழ்த்துகளுடன் .

    ReplyDelete

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...