Wednesday, 29 June 2022


 திரள் திராளாக

பொங்கி வரும் நினைவலைகளின்

தொகுப்பும்

கனவுகளில் சில நினைவுகளின்

ஒருங்கிலும் யானை துரத்தலும்

நாகம் தீண்டுதலும்

கண்மூடிதுயிலுக்குள்

நுழையும் கணத்தில்

உடலதிர்தலும்

கனவுக்குள் கனவுக்குள்

மிதத்தலும்

நினைவுக்கும் நினைவோட்டத்திற்கும்

இடையில் ஊடாடுவது

ஏகாந்தமா?

கண்திறக்கையில்

புறச்சூழலின் தாக்கம் உடல் முழுவதும் பாய 

உடலும் உயிரும் இனக்கமாயின்

தூக்கமும் விழிப்பும் நிகழ்வது

உடலிடமா மனதிடமா?


😊 கலியபெருமாள்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...