Saturday, 23 April 2022

மூத்த அகதி


 மூத்த அகதி  -நாவல் விமர்சனம்

எழுதியவர் - வாசு முருகவேல்




இலங்கையில் ஏற்பட்ட இன பிரச்சனையினால் இலங்கைவாழ் தமிழர்கள் தங்கள் தாய்நாடான இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தாம் வாழும் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ தலைப்பட்டனர் அப்படி அகதியாக வந்தவர்களின் வாழ்வு இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் அவர்களின் வாழ்வை பற்றிய பதிவாகவும் தனி நபரின் துயரம் நிறைந்த வாழ்க்கையாகவும் பதிவு செய்துள்ளார்.


இந்த நாவலில் வரும் பாலன், வாசன், துவாரகன், ரூபன் , வாசனின் தந்தை மற்றும் தாய் இவர்கள் ஈழத்தமிழர்  வர்சா, ஜீவலட்சுமி  போன்றோர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்

பாலன் என்ற ஈழத் தமிழர் லண்டனில் உள்ள ஒருவரின் சொந்த சொத்தான மூன்றடுக்கு மாடி வீட்டை வாடைக்கு எடுத்து அதை கெஸ்ட்ஹவுஸ் என்ற பெயர் கொடுத்து லண்டன், பிரான்ஸ் இன்னும் பல நாடுகளில் உள்ள ஈழத் தமிழரின் திருமணங்களை இங்கே நடத்தி வைக்கிறார் ஒரு கட்டத்தில் அந்த கெஸ்ட்ஹவுஸ் பல்வேறு நெருக்டிகளால்  நடத்த முடியாமல் முடங்கி போகிறது பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகின்றனர் , அவரே பல பேருக்கு மாமனாராகவும் அப்பாவாகவும் இருந்து திருமணங்களை முடித்து வைக்கிறார் அவருக்குத்துணையாக வாசன், தூவாரகன் ,ரூபன் போன்றோர் அந்த அடுக்குமாடி வீட்டை பராமரிக்கவும் திருமணம் நடந்தால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளை கவனிப்பதிலும் உதவி செய்கின்றனர். அந்த ஏற்பாடுகளுக்கும், தங்களின் சொந்த பந்தங்களை பார்கவரும், திருமணம் செய்துகொள்ள வரும் அகதிகள் கொடுக்கும் பணமே அவர்களுக்கு பொருளாதாரம் பாலன் ஒரு மகேந்திரா பொலிரோ வைத்திருக்கிறார்


வாசனின் தந்தையும் தாயும் ஒன்றாகவே அகதியா வந்தவர்கள் வசதியான வீட்டில் வாழ்ந்தவர்கள் வாசனின் தந்தையாருக்கு உடல் நலம் இல்லாமல் படுத்தபடுக்கையாக இருக்கிறார் அவர் தன் வேதனையை அதிகம் வெளிப்படுத்தாத தன்னால் தொல்லை இல்லாத வண்ணம் இருக்க வேண்டும் என நினைப்பவர் 

தன் வலியை வேதனையை தனக்ககுள்ளேயே வைத்துக்கொள்கிறார். தாயார் தன் மகன் கணவன் இருவரையும் ஒருவாரு பார்த்துக்கொள்கிறார்

கணவரின் உடல்நிலை பாதிப்பால் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை என்பதால் பை ஒன்று இணைத்து அதன் மூலம் தினமும் காலையில் பையிலிருந்து சிறுநீரை ஒரு பாட்டிலில் ஊற்றி வெளியே கொண்டுபோய் ஊற்றிவிடுவார்கள் தாயாரும் வாசனும் சற்று சிரமத்துடனும் மூக்கில் துணியை வைத்துக்கொண்டு தான் அவ்வேலையை செய்வர்

தந்தையின் உடல்நிலை பாதிப்பால் வீடு வாடைக்கு கொடுப்போரும் அடிக்கடி காலி செய்யும்படியும் இங்கே இறந்துவிட்டால் வேறு யாரும் அவ்வீட்டிற்கு வாடகைக்கு வரமாட்டர்கள் எனவும் தொல்லை கொடுப்பார்கள் ,வீட்டு மாறும் போது ஒவ்வாரு தடவையும் ஏரியா போலீஸ் ஸ்டேசனில் வீட்டு உரிமையாளரின் கையைப்பத்துடன் கடிதம் தர வேண்டும் அக்கடிதத்தையும் வீட்டின் உரிமையாளர் எழுதமாட்டார் வாசன் தான் எழுதவேண்டும் அகதியின் வாழ்வில் இது எழுதப்பட்ட சட்டம் அகதிக்கு வீடு கிடைப்பதே சற்று சிரமம்தான்.

வர்சா எதிர் வீட்டு பள்ளிக்கு செல்லும் பெண் அவளுக்கும் துவாரகனுக்கும் இடையே நடப்பது என்ன என்பதும் சற்று குழப்பத்துடன் பதிவாகி உள்ளதாக நினைக்க வைக்கிறது

ஜீவலட்சுமிக்கும் வாசனுக்கும் கடைசியாக யாரும் இல்லாத பள்ளிக்கு அருகே ஒரு வீட்டில் உறவு தொடங்கி முடிந்து விடுகிறது.

 வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கு பெரும்பாலும் அதிக வயதில் திருமணம் நடப்பதாக நாவலில் சொல்லப்படுகிறது மாப்பிள்ளைகள் தலையில் பெரும்பாலும் முடியிருப்பதில்லை

தேடப்படும் இயக்க நபராக ரூபன் வாசனுக்கும் பாலனுக்கும் பல வகைகளில் உதவி செய்கிறார் . பெரும்பாலான நேரங்களில் ஏதாவது காரணத்துக்காக நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும்  மது அடுத்தியபடியேஇருக்கிறனர்


நாவலில் அழகியலாக இரண்டு முக்கியமான பதிவுகள் உள்ளன

1.வாசன் தன் தந்தைக்கு செய்யும் பணிவிடை, இறந்த பின் அன்றை தினத்தில் மழையோடு அவரை தகனம் செய்யும் நேரங்கள்


2.எம்ஜியார்நகர் அதன் சுற்றுபுறங்கள் சென்னையில் ஈழத்தமிழருக்கான உணவு வகைகள் அவர்கள் விரும்பி செல்லும் உணவகங்களை பற்றிய பதிவுகளும் சிறந்த அழகியல்


நாவலின் தலைப்பிற்கும் நாவலுக்கும் சம்பந்தம் என்ன என்பதும் கேள்விக்குறியாக (எனக்கு ) உள்ளது அது பாலனா, வாசனின் தாயா? தந்தையா? பொதுவாக நாவலில் வரும் அனைவருமா ?


எல் டி டி ஈ , ஈஆர் எல் எப் போன்ற இயக்கத்தினரின் இயக்க செயல்பாட்டில் உள்ள சாதக பாதகங்களையும் வாழ்வியலின்  பல கசப்பான அனுபவங்களையும் , அகதிகளின் வாழ்வை பற்றிய ஒரு அவசியமான பதிவு இந்நாவல் 


கட்டுரையாளர்

வீ.கலியபெருமாள்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...