Tuesday, 13 August 2024





சீண்டப்படாத கலையின் புலம்பல்


ஒராயிரமாண்டின் நிதர்சன சாட்சி

கலவையான மரபுத் தொடர்ச்சியின்

எச்சங்களின் ஆணவக் கூச்சல்கள்

அதனெதிரே நிற்கக்  அருகதையற்றவர்கள்

தற்பெருமைக்கும் கலையின் பரிணாமங்களின் தன்னெழுச்சியில் வெளியுமிழ்ந்த

தரிசனங்களில் ஒன்று

பொருளியல் தேவையின் அழுத்தத்தில்

உணர்வின்றி தன்னிச்சையாய் 

வாகன ஒட்டத்தில் கன்னத்தில் ஒற்றிக் கொள்ளும் பங்களிப்பில்லா சமுதாயத்தின் பிரதிநிதி

வார இறுதி நாட்களில் கட்டுப்படுத்தவியலா அதீத மக்கள் வரத்தினால் சீண்டப்படாத 

கலை நுணுக்கங்கள்  சலிப்புற 

தற்படங்களின் ஒவ்வாரு கணத்திற்கும்

பெருமூச்சு விட்டபடி கம்பீரமாக நிற்கும்

பெருமைக்கும் சிறுமைக்கும் பதிலளிக்காமல் காலத்தின் கோலத்திற்கு முன்னுதாரனமாய்

தன்னடக்கத்துடன் அமர்ந்திருக்கும்

பெரிய கோயில்



கலித்தேவன்.


Friday, 2 August 2024

 அகத்தில் பாய்ந்த ஒளி உடலை

ஊடுருவி முழுவதும் ஒளிர்ந்தது

கூடுதலாக  என்னப்பா மகிழ்ச்சியாயிருக்க 

ஒன்றுமில்லை

அகத்தின் அழகு என்றேன்

பீறீட்டு வெளியாகும் போதாமையை புன்னகையின் ஒளியால் பரவச் செய்தாய் 

முழுமையடைய மறுப்பே துணை

தேடிக் கொண்டிருப்பதை விட அறிவில் அறிவதே ஆனந்தம்

துயரில் நுனி நாக்கே பெரும் எதிர்

வளைய வரும் கோள்களா காட்டும்

வழியெய்யறிவதே நோக்கு

ஈர்ப்பின் ரகசியம் ஈர்க்கப்படுவதே

ஒளிப்புள்ளி ஈர்க்கப்பட்டு

ஜோதியாவது

மூழ்குவதும் இரண்டற கலப்பதும்

தூய ஈர்ப்பின் இருப்பு

தனிமைத் தேனை பருகுவதின்பம்

விருப்பு வெறுப்பு இயல்பாகும்

எதையும் ஏற்றுக் கொள்ளலில் 

தெளிவு

அகமும் புறமும் ஒன்றான பின்னே

வெளி ஒன்றுண்டோ?


கலித்தேவன்




  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...