கடவுளின் கோரிக்கை
காலை நீண்ட நடை பயிற்சியின்
முடிவில் தேநீர் கடையில்
உடல் நலம் பற்றிய விவாதம் முற்றியது
கடவுள் படைத்தது நம்மை பரிசோதனை செய்வதற்கென முடிந்தது
எண்ணெய் பிழிந்தெடுக்கும்
சுட்ட வடையை தின்றாகிவிட்டது
மறுநாள் காலை தனித்து நடை பயின்ற போது கடவுள் எதிர்ப்பட்டார்
கவலை தோய்ந்த முகத்தோடு
கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார்
பதற்றமடைந்து ஏன் என வினவினேன்
உலக இன்பங்களில் படைத்தலலின்பமே
சிறந்தது
காண்பித்தார் சிறு கை வீசலில்
எதிரே திரையில் நான் தந்தையான
மகிழ்வின் தருனத்தை காட்டியது
மறு கை வீசலில் தாத்தாவானதை
திரையிட்டார்
போதும் போதும் என சொல்லத்தக்க
அளவுக்கு காண்பித்தார்
படைத்தலுக்கு உங்கள் துணையும்
ஈடுபாடும் தேவைதானே
தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களிடமே உள்ளது
இன்பங்களும் சேர்ந்து தானே வருகிறது
இரண்டையும் பழகிக் கொள்ளுங்கள்
வரும் கோரிக்கைளை கேட்க எனக்கும்
பதற்றம் தொற்றிக் கொள்ளுமே
கருணை காட்டுங்கள் என்றார்
தெருமுனை வரை வந்து காணாமல்
மறைந்தார்
ஒற்றை காலை நீட்டியபடி வெறும் தரையில் பாலீதீன் சாக்கை விரித்து
காய்கறிகளை கூறு கட்ட தொடங்கினாள்
ஒரு கிழவி
கலித்தேவன்

No comments:
Post a Comment